செய்திகள்
கைது

கீழக்கரையில் இடத்தகராறில் தொழிலாளி கொலை- 2 பேர் கைது

Published On 2021-02-04 06:48 GMT   |   Update On 2021-02-04 06:48 GMT
கீழக்கரையில் இடத்தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பூசத்துரை. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் உமயவேலு, மூக்கன்.

இவர்களுக்கு இடையே இடத்தகராறு நீண்ட காலமாக உள்ளது. இதில் பூசத்துரைக்கு எதிராக வழக்கு விசாரணையில் உள்ளது.

அடிக்கடி பூசத்துரை மற்றும் எதிர் தரப்பி னரிடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு வந்தது.

நேற்று உமயவேலு மகன் ஹேமநாதன் (வயது 24), மூக்கன் மகன் சோணைமுத்து (29) ஆகியோர் பூசத்துரை வீட்டின் முன்பு வந்து வாக்குவாதம் செய்தனர்.

அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பூசத்துரையின் மகன் தீபக் ராஜா (23) வெளியே வந்து தட்டிக்கேட்டார். இதில் 2 தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஹேமநாதன், சோணைமுத்து ஆகியோர் சாலையில் கிடந்த பேவர் பிளாக் கல்லை எடுத்து தீபக் ராஜாவை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தீபக் ராஜா கூலித்தொழில் செய்து வந்தார். அவர் இடத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து ஹேமநாதன், சோணைமுத்து கைது செய்யப்பட்டனர்.


Tags:    

Similar News