செய்திகள்
தற்கொலை

வெப்படை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-01 04:36 GMT   |   Update On 2021-02-01 04:36 GMT
வெப்படை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

வெப்படை அருகே பச்சாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News