செய்திகள்
கோப்பு படம்.

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-01-25 06:40 GMT   |   Update On 2021-01-25 15:06 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மாவட்டம் முழுவதும் 17, 337 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 176 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் நேற்று திருப்பூர் மாநகரப்பகுதியை சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 223 ஆக உள்ளது.
Tags:    

Similar News