செய்திகள்
பேரையூர் அருகே சூதாடிய 3 பேர் கைது
பேரையூர் அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
பேரையூர் போலீசார் எஸ்.பாரைப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சுப்புராமு (வயது 46), வேல்முருகன் (45), ஆனந்தன் (48) ஆகியோர் அங்குள்ள மந்தை அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரொக்கம் ரூ.530-ஐ பறிமுதல் செய்தனர்.