செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் பலி
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகேயுள்ள அமரபூண்டி எவிசன்நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்தபோது, அந்த வழியாக சென்ற வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவின் மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.