செய்திகள்
அண்ணா அறிவாலயம்

சென்னையில் 21-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2021-01-18 09:32 GMT   |   Update On 2021-01-18 09:32 GMT
சட்டசபை தேர்தலுக்கான ஆக்கப்பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தேர்தலுக்கான ஆக்கப்பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் கூட்டணி, போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News