செய்திகள்
கலெக்டர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்

ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினவிழா- கலெக்டர் பங்கேற்பு

Published On 2021-01-17 12:11 GMT   |   Update On 2021-01-17 12:11 GMT
ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் 33-ம் ஆண்டு திருவள்ளுவர் தினவிழா புதிய பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் கலெக்டர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பங்கேற்றார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் 33-ம் ஆண்டு திருவள்ளுவர் தினவிழா புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நடந்தது. விழாவுக்கு ராணிப்பேட்டை தமிழ்ச்சங்க தலைவர் புலவர் ஏ.தனபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வக்கீல் த.தினகரன் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதன்மை விருந்தினராக மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பங்கேற்று திருவள்ளுவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி பேசினார். 

ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
Tags:    

Similar News