செய்திகள்
அவினாசி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
அவினாசி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு, வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவினாசி:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணபதி நாயக் மகன் ஜட்டுநாயக் (வயது33). இவர் அவினாசி அருகே முத்துசெட்டிபாளையத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை.இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி தனது நண்பருக்கு போன் செய்து இனிமேல் எனக்கு திருமணமாகாது. எனவே நான் பூச்சிகொல்லி மருந்து சாப்பிட்டுவிட்டேன் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரது நண்பர் ஜட்டுநாயக் தங்கி இருந்த அறைக்கு விரைந்து சென்றார். அப்போது அங்குள்ள அறையில் மயங்கி கிடந்த ஜட்டுநாயக்கை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவினாசி போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.