செய்திகள்
மரணம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2021-01-16 10:42 GMT   |   Update On 2021-01-16 10:42 GMT
ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த பனவெளி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாசாமி(வயது65). விவசாய கூலிதொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள வெட்டாற்றில் குளிப்பதற்காக சென்றார். ஆற்றில் மழை தண்ணீர் அதிகஅளவு சென்று கொண்டிருந்தது. திடீரென தண்ணீரில் அப்பாசாமி இழுத்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னை காப்பாற்றும்படி சத்தம்போட்டார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அப்பாசாமியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரில் மூழ்கிய அப்பாசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர், மூழ்கிய இடத்தில் இருந்து 200 அடி தொலைவில் ஆற்றில் வளர்ந்து கிடக்கும் நாணலில் சிக்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அப்பாசாமி உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News