என் மலர்
நீங்கள் தேடியது "drowning death"
- ஆக்ராவில் உள்ள யமுனை நதியில் வீடியோ ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.
- இறந்த ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனை நதியில் வீடியோ ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த ஆறு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று வயல்களில் வேலை செய்துவிட்டு அவர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர். நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அவர்கள் முதலில் ஆற்றங்கரையில் விளையாடி ரீல்ஸ் வீடியோ எடுத்ததைக் கண்டனர்.
பின்னர் ரீல்ஸ் எடுக்க ஆழத்திற்குச் சென்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பல மணி நேரத்திற்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்த ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
- மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தினவிழா விடுமுறையை கொண்டாட அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அவர்கள் ஒன்றாக ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் தங்களுடன் வந்த தாராபுரம் ராம்நகரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் ஜெரோமியா (வயது 16) என்பவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.
உடனடியாக இதுபற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவனை சுமார் 2 மணிநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மீட்பு பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஜெரோமியா தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மிதந்தது. இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்ணைநல்லூர்;
விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் குரு பிரசாத்( வயது15). விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று மதியம் நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாற்றில் குளிக்க. சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென குரு பிரசாத் நீரில் மூழ்கி மாயமானார். உடன் வந்த நண்பர்கள் பொதுமக்கள் ஆகியோர் தேடிப் பார்த்தனர்.
குரு பிரசாத் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரர் தலைமையிலான மீட்பு குழுவினர் வரவைத்து நீரில் மூழ்கி மாயமான குரு பிரசாத்தை தீவிரமாக இரவு 11 மணி வரை தேடி வந்தனர்.
வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் குளிரின் காரணமாகவும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கி மாயமான குருபிரசாத்தை தேடும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இன்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் குருபிரசாத் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நண்பருடன் குளிக்கச் சென்று பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள செறுதுருத்தி பகுதியை சேர்ந்தவர் கபீர் (வயது47). பேக்கரி உரிமையாளர். இவரது மனைவி ஷாஹினா(35). இவர்களது மகள் சாரா(10). இவர்கள் 3 பேரும் பாரதப்புழா ஆற்றுக்கு சென்றனர்.
அவர்களுடன் ஷாஹினாவின் தங்கை மகன் புவாத் சனின்(12) என்ற சிறுவனும் சென்றான். கணவன்-மனைவி இருவரும் ஆற்றங்கரையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுமி சாரா எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் விழுந்தாள். இதனைப்பார்த்த சிறுவன் புவாத் சனின், சிறுமியை காப்பாற்ற முயன்றான். ஆனால் இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கபீர், அவரது மனைவி ஷாஹினா ஆகியோரும் ஆற்றுக்குள் இறங்கினர்.
அப்போது அவர்களும் ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள். 4 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், ஆற்றுக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றனர். அப்போது ஷாஹினாவை மட்டுமே மீட்க முடிந்தது.
அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கபீர், சிறுமி சாரா, சிறுவன் புவாத் சனின் ஆகிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து செறுதுருத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.
நெல்லை:
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகஅர்ச்சுனன். மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வேளார்குளத்தில் உள்ள தங்களது நண்பர் வீட்டுக்கு நேற்று வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். முத்துமாலையம்மன் கோவில் அருகே ஆற்றில் 3 பேர் குடும்பத்தையும் சேர்ந்த சுமார் 15 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் சிறுமிகள் உள்பட 6 பேர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்களும், அவர்களது உறவினர்களும் அவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில் 4 பேரை மீட்டனர்.
இதில் நாகஅர்ச்சுனன் மகள் வைஷ்ணவி (வயது 13), அய்யப்பன் மகள் மாரி அனுஷியா (16) ஆகிய 2 பேரையும் காணவில்லை. அவர்கள் ஆழமான பகுதியில் மூழ்கினர். இதுகுறித்து உடனடியாக முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரவநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்.
மேலும் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர்.
மாயமான 2 சிறுமிகளையும் ஆற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டாள். தொடர்ந்து மாரி அனுஷியாவை தேடி பார்த்தனர். ஆனால் இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை முதல், மாயமான மாரி அனுஷியாவை தேடும் பணியில் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மாரி அனுஷியா மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (17) அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் கிஷோர் குமார், ஜெகதீஷ், மகேஷ்குமார் ஆகியோருடன், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில், வார்ப்பு பகுதியில் குளிக்க சென்றார்.
அப்போது, நண்பர்களுடன் மேலிருந்து கீழே கடலில் குதித்து விளையாடியபோது நீரில் மூழ்கிய ஏஜாஸ் மீண்டும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அருகில் இருந்த மீனவர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்களும் கடலில் மூழ்கி மாயமான ஏஜாசை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீனவர் ஒருவர் தேடும் போது நீருக்கு அடியில் மாணவனின் உடல் கிடைத்தது மாணவனின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தல் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வருபவர் ரஞ்சித்பிரசாத் (34).
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்பிரசாத் தனது மனைவி கீதாதேவி (28) மற்றும் குழந்தைகளுடன் சிப்காட் அருகில் உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
நேற்று காலை ரஞ்சித்பிரசாத் வேலைக்கு சென்றுவிட்டார். கீதாதேவி கடைக்கு சென்றார். குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. கீதாதேவி வீடு திரும்பியபோது ரஜினிகுமாரி (4) என்ற பெண் குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோது சிறுமி ரஜினி குமாரி அருகில் தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரஞ்சித் பிரகாஷ்- கீதாதேவி தம்பதியருக்கு 4 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தது. அந்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயல் இந்திராநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). பெயிண்டர்.
நேற்று இரவு 9.30 மணி அளவில் மணிகண்டன் தனது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் சுவரில் உட்கார்ந்து செல்போனில பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர்.
இதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அம்பத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மணிகண்டனை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இரவு 11 மணியளவில் அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் உயிர் இழந்து விட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மணிகண்டனுக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. மணிகண்டன் உடலை கண்டு உறவினர்கள் கதறிய காட்சி பரிதாபமாக இருந்தது.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 80). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கிணறு அருகே நின்று கொண்டு இருந்தார். திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீரம்மாளின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர்வர் சிவக்குமார் (38). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஈஸ்வரன் காட்டு தோட்டத்தில் உள்ள கிணற்று சுவரில் படுத்து தூங்னார். அப்போது எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
சென்னை ஆவடி நந்தவனம் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கட்டிட காண்டிக்டராக்டர்.இவரது மனைவி ஜீவாஆசிரியை. இவர்களது மகன் தினேஷ்குமார் (வயது24). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை படித்து விட்டு அங்குள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்கள் 4 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார்.
கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து வந்தனர். நேற்று மதியம் அவர்கள் மதுஅருந்திவிட்டு தங்கி இருந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளித்தனர். சாப்பிடுவதற்காக நண்பர்கள் நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய நிலையில் தினேஷ்குமார் மட்டும் தொடர்ந்து நீச்சல் குளத்தில் குளித்தார்.
ஆனால் வெகுநேரமாகியும் தினேஷ்குமார் ஓட்டல் அறைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் நீச்சல் குளத்தில் இறங்கி பார்த்தனர். அப்போது நீரில் மூழ்கியபடி தினேஷ்குமார் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






