search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water tank child"

    கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தல் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வருபவர் ரஞ்சித்பிரசாத் (34).

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்பிரசாத் தனது மனைவி கீதாதேவி (28) மற்றும் குழந்தைகளுடன் சிப்காட் அருகில் உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை ரஞ்சித்பிரசாத் வேலைக்கு சென்றுவிட்டார். கீதாதேவி கடைக்கு சென்றார். குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. கீதாதேவி வீடு திரும்பியபோது ரஜினிகுமாரி (4) என்ற பெண் குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோது சிறுமி ரஜினி குமாரி அருகில் தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரஞ்சித் பிரகாஷ்- கீதாதேவி தம்பதியருக்கு 4 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தது. அந்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

    ×