search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரில் மூழ்கி விவசாயி பலி
    X
    நீரில் மூழ்கி விவசாயி பலி

    சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி விவசாயி பலி

    சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூங்கில்துறைப்பட்டு:

    சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 40). விவசாயியான இவர் சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஏழுமலை திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரி கரையோரம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சங்கராபுரம் போலீசார் அனுப்பி வைத்தனர். இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற ஏழுமலை ஏரியில் தவறி விழுந்து மூழ்கி பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×