செய்திகள்
வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது

Published On 2021-01-15 10:00 GMT   |   Update On 2021-01-15 10:00 GMT
வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்பு படைவீரர்கள் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் அண்ணா நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சாந்தி.

இந்தநிலையில் இவர்களது வீட்டின் சமையல் அறை பகுதியில் ஒரு நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட சாந்தி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த பாம்பை வெளியே விரட்டியுள்ளார். இருப்பினும் பாம்பு வெளியே செல்லாமல் படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.

இதுகுறித்து புகளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.


Tags:    

Similar News