செய்திகள்
விபத்து

வத்தலக்குண்டு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஆட்டோ டிரைவர் பலி

Published On 2021-01-08 22:32 GMT   |   Update On 2021-01-08 22:32 GMT
வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பட்டிவீரன்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஜி.தும்மலபட்டியை சேர்ந்தவர் சேக்பரீத் (வயது 21). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் அவர் வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டிவீரன்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் வந்தபோது, வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்த சம்சுல்உதா (52) என்பவர் ஓட்டி வந்த கார் ஷேக்பரீத் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் படுகாயமடைந்த ஷேக்பரீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்சுல்உதா காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News