search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோட்டார் சைக்கிள் மோதல்"

    கோட்டக்குப்பத்தில் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 41). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் முதலியார்பேட்டை போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவர் பணம் வசூல் செய்வதற்காக மரக்காணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பணத்தை வசூலித்து விட்டு மீண்டும் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    கோட்டக்குப்பம் இந்திரா நகர் பகுதியில் வந்த போது, எதிரே வேகமாக வந்த கார் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் திருமணி, சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதும், அவர்கள் சென்னைக்கு சென்றதும் தெரியவந்தது.

    மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன். அ.தி.மு.க. நிர்வாகி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள்.

    பாலகிருஷ்ணனின் மகன் ராஜகுரு(வயது27). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சீதப்பாலை அடுத்த பூலாங்குழியைச் சேர்ந்த மெர்லின்ஷீபா(24) என்பவருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மெர்லின்ஷீபா 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று அவரை பார்ப்பதற்காக புதுமாப்பிள்ளை ராஜகுரு மோட்டார் சைக்கிளில் பூலாங்குழி சென்றார்.

    தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுரு சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ராஜகுருவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் கதறி அழுதனர்.

    ராஜகுருவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்த வாலிபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரை போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை விடுவித்து விட்டதாக தெரிகிறது. இது ராஜகுருவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இன்று அவர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் மீண்டும் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×