search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto driver died"

    • இவர் சம்பவத்தன்று பத்ரகாளிபுரம் ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த வாகனம் இவர் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தேனி:

    போடி அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (43). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று பத்ரகாளிபுரம் ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சங்கரபாண்டி யன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் இவர் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலத்தில் பட்டாசு வெடித்து ஆட்டோ டிரைவர் பலி கல்லூரி மாணவர் படுகாயம்

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரை சேரந்தவர் சிலம்பரசன். இவரது மகனுக்கு திருமங்கலம் நகரில் உள்ள ஒரு கல்யாண மகாலில் காதணி விழா நடத்தினார்.

    அப்போது சீர்வரிசை கொண்டு வந்தபோது பட்டாசு வெடிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகில் உள்ள வெள்ளைக் கல்லை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (வயது 35), கல்லூரி மாணவர் முத்து முனியாண்டி (18) ஆகியோர் தங்கள் கைகளில் பட்டாசுகளை வைத்திருந்தனர்.

    பட்டாசு வெடித்தபோது அதன் தீப்பொறி பிரபு, முத்துமுனியாண்டி கையில் வைத்திருந்த பட்டாசு மீது விழுந்தது. அடுத்த நொடியில் தீ பரவி பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு நேற்று பரிதாபமாக இறந்தார். முத்துமுனியாண்டி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×