செய்திகள்
மு.க.ஸ்டாலின்

காரிமங்கலம் அருகே மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த மக்கள் கிராம சபை கூட்டம் ரத்து

Published On 2021-01-07 09:42 GMT   |   Update On 2021-01-07 09:42 GMT
தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று தி.மு.க. தலைவர் மு,க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த மக்கள் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி:

தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இன்பசேகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி காரிமங்கலம் அருகே பைசுஅள்ளி ஊராட்சி கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராம சபை கூட்டம் இன்று (7-ந் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக இந்த கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News