செய்திகள்
தற்கொலை

புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-01-06 10:02 GMT   |   Update On 2021-01-06 10:02 GMT
புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:

புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரதவீதியை சேர்ந்த சந்திரன் மகன் கணேசன் (வயது 29). இவருக்கு முத்துலட்சுமி (25) என்ற மனைவியும், தனலட்சுமி (2), கீர்த்திகா (1) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கூலி தொழிலாளியான இவர் சரியான வேலை கிடைக்காததால் குடும்ப செலவுக்கு பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அதே ஊரில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார். பின்பு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்றார்.
Tags:    

Similar News