செய்திகள்
மழை

காலை 10 மணி வரை மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-01-05 02:10 GMT   |   Update On 2021-01-05 02:19 GMT
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் காலை 10 மணி வரை மழை தொடரும்.

* விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

* வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News