செய்திகள்
கொள்ளை

3 அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

Published On 2021-01-04 06:23 GMT   |   Update On 2021-01-04 06:23 GMT
3 அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், கருவறையில் இருந்த 1¼ பவுன் நகையை திருடிச்சென்றனர். அதே போல சேகண்யம் அருகே ஏரிக்கரையில் உள்ள ஆச்சியம்மன் கோவில் பூட்டை நள்ளிரவில் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவில் ½ பவுன் நகையை திருடிச்சென்றனர்.

இது தவிர ஆரம்பாக்கம் பஜாரில் உள்ள லட்சுமி அம்மன் கோவிலில் இருந்த ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கும்மிடிப்பூண்டி மற்றும் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News