செய்திகள்
கைது

தூத்துக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

Published On 2020-12-26 11:52 GMT   |   Update On 2020-12-26 11:52 GMT
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தென்பாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தென்பாகம் போலீசார் மற்றும் தனிப்படையினர் சிதம்பரநகர் மற்றும் பிரையன்ட் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கேரளமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை சீட்டுகளில் எழுதிக்கொடுத்து, ஆன்லைன் முடிவுகள் விவரங்களையும் தெரிவித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இவ்விதம் 3 எண்கள் கொண்ட லாட்டரி சீட்டுகளை துண்டு சீட்டுகளில் எழுதிக்கொடுத்து விற்பனை செய்த பிரையன்ட்நகரை சேர்ந்த முனியசாமி (65) , முருகன் (71) மற்றும் சிதம்பரநகரை சேர்ந்த அய்யாசாமி (65) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து லாட்டரி எண்கள் அச்சிடப்பட்ட பேப்பர்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News