செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

Published On 2020-12-19 01:55 GMT   |   Update On 2020-12-19 01:55 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர் அங்கு தண்ணீர் குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுந்ததால், அங்குசுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News