செய்திகள்
கமல் ஹாசன்

அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி... லஞ்சம் ஊழல் குறித்து கமல் கருத்து

Published On 2020-12-17 10:08 GMT   |   Update On 2020-12-17 10:08 GMT
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் சிக்கியவர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல் ஹாசன், பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள் என கூறி உள்ளார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை மற்றும் அதிரடி சோதனைகளில், 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி.

இவ்வாறு கமல் கூறி உள்ளார்.
Tags:    

Similar News