செய்திகள்
மதுரை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது
மதுரை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவனியாபுரம்:
மதுரை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வருகின்றன. நேற்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் வந்த பயணிகள் 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன.
சந்தேகமடைந்த அதிகாரிகள் இருவரையும் தீவிர சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.42.50 லட்சம் மதிப்பிலான 850.80 கிராம் தங்க பேஸ்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வருகின்றன. நேற்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் வந்த பயணிகள் 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன.
சந்தேகமடைந்த அதிகாரிகள் இருவரையும் தீவிர சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.42.50 லட்சம் மதிப்பிலான 850.80 கிராம் தங்க பேஸ்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.