செய்திகள்
கோப்புபடம்

வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி மளிகை கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு

Published On 2020-12-15 08:34 GMT   |   Update On 2020-12-15 08:34 GMT
ஆவடி அருகே வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி மளிகை கடையில் ரூ.1½ லட்சம் திருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி:

திருமுல்லைவாயல், சோளம் பேடு மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருப வர் பாலமுருகன். இவர் கடையில் இருந்தபோது சீட்டு பணம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை எண்ணிக் கொண்டு இருந்தார். அப் போது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பால் பாக்கெட் கேட்டார். 

இதை யடுத்து பாலமுருகன் பணத்தை அங்கேயே வைத்து விட்டு பால் பாக்கெட் எடுப் பதற்காக திரும்பினார். அந்த நேரத்தில் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மர்ம வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து திருமுல்லை வாயல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News