செய்திகள்
திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
திருவட்டார் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 25), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அபிஷா (20) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு சிவகுமார் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் அபிஷா, கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் வேலைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் சிவகுமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி இல்லாததால் மனமுடைந்த இவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக் டர்கள், சிவகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவட்டார் அருகே இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 25), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அபிஷா (20) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு சிவகுமார் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் அபிஷா, கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் வேலைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் சிவகுமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி இல்லாததால் மனமுடைந்த இவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக் டர்கள், சிவகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.