செய்திகள்
தற்கொலை

திருச்செந்தூரில் முதியவர் தற்கொலை

Published On 2020-12-14 10:25 GMT   |   Update On 2020-12-14 10:25 GMT
திருச்செந்தூர் லாட்ஜில் விஷ மாத்திரைகளை விழுங்கி முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி வலம்புரி கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 68). இவர் நேற்று முன்தினம் காலை திருச்செந்தூர் வந்தார். அங்குள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை அறையை முனியப்பன் காலி செய்ய வேண்டிய நிலையில் அவர் காலி செய்யவில்லை.

இதையடுத்து லாட்ஜ் மேலாளர் எடிசன் ஆபிரகாம் (47) என்பவர், முனியப்பன் தங்கியிருந்த அறைக்கு சென்று, வெறுமனே சார்த்தியிருந்த கதவைத்தள்ளி பார்த்துள்ளார். அப்போது முனியப்பன் படுக்கையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் போலீசார் வந்து பார்வையிட்டனர். அவர் அருகே விஷ மாத்திரையின் காலி பாட்டில் கிடந்தது. எனவே அதிக விஷ மாத்திரைகளை விழுங்கி முனியப்பன் தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News