செய்திகள்
விபத்து

திண்டிவனத்தில் ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்- விவசாயி பலி

Published On 2020-12-12 01:26 GMT   |   Update On 2020-12-12 01:26 GMT
திண்டிவனத்தில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 59). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் திண்டிவனம் ஜெயபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஜெயபுரம் ரவுண்டானா சந்திப்பில் திரும்பியபோது, அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது ராஜேந்திரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த அவரை, திண்டிவனம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News