செய்திகள்
கோப்புபடம்

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து டி.வி., பட்டுப்புடவைகள் திருட்டு

Published On 2020-12-07 13:04 GMT   |   Update On 2020-12-07 13:04 GMT
கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து டி.வி., பட்டுப்புடவைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
கணபதி:

கோவை கணபதி வி.ஜிராவ் நகரை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுவற்றில் மாட்டி இருந்த டி.வி.யை காணவில்லை. அத்துடன் பீரோ திறக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த துணிகள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டு இருந்த பட்டுப்புடவைகளை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் அள்ளிச்சென்றது தெரியவந்தது.

அதுபோன்று கணபதி கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த நடராஜ் (63) என்பவருக்கு சொந்தமான ஒர்க்‌ஷாப் கம்பெனியில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே சென்றனர். ஆனால் அங்கு பொருட் கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

Similar News