மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு கோவிந்தபுரம் கரந்தமலை தெருவை சேர்ந்தவர் பரணிவல்லவன் (வயது 33). இவர் அந்த பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக, வடமதுரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து பரணிவல்லவன் குண்டர் சட்டத்தின்கீழ், தேனி மாவட்ட ஜெயிலில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி அடைக்கப்பட்டார்.
அவர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் பரணி வல்லவன் நள்ளிரவு கழிவறைக்கு சென்றார். அப்போது, தான் உடுத்தியிருந்த கைலியை கழற்றி ஜன்னலில் மாட்டி தூக்கில் தொங்கினார்.
இதைப்பார்த்த ஜெயில் காவலர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரணி வல்லவன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. மதுரை மத்திய ஜெயிலில் போலீசாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குண்டாஸ் கைதி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.