செய்திகள்
சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட காட்சி.

பலத்த மழையால் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றம்- அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2020-11-30 14:31 GMT   |   Update On 2020-11-30 14:31 GMT
திருத்துறைப்பூண்டி அருகே நிவர் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன. அந்த மரங்களை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் நிவர் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கட்டிமேடு சத்திரம் ஆற்றங்கரை தெருவில் மரங்கள் சாய்ந்தன. இதனால் சாய்ந்த மரங்களை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர். மேலும் மின்கம்பிகள் மீது சாய்ந்த மரக்கிளைகளும் மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு வெட்டி அகற்றப்பட்டன.

அப்போது கட்டிமேடு ஊராட்சி தலைவர் மாலினிரவிச்சந்திரன், துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலாளர் புவனேஸ்வரன், மின்ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News