செய்திகள்
மதுரை அருகே வீடு புகுந்து நகை திருட்டு
மதுரை அருகே வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தல்லாகுளம் சிங்கராயர்காலனி பகுதியை சேர்ந்தவர் குருபிரியாரி முல்ஜி (வயது 74). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 14½ பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.