செய்திகள்
தற்கொலை

திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2020-11-25 11:07 GMT   |   Update On 2020-11-25 11:07 GMT
திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர்:

கரூர் அருகே உள்ள பாகநத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 21). டெய்லரான இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 மாதத்தில் சரவணன் தற்கொலை செய்து கொண்டது, அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கரூர் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் (41). கரூர் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயபால் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெயபால், தற்கொலைக்கான காரணம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News