செய்திகள்
வடமதுரை அருகே விஷம் குடித்து முன்னாள் கவுன்சிலர் தற்கொலை
வடமதுரை அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 37). இவர் வடமதுரை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் விஷம் குடித்து ஜெயராம் மயங்கிக் கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயராம் பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.