செய்திகள்
கைது

தென்காசி அருகே குண்டர் சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

Published On 2020-11-18 09:53 GMT   |   Update On 2020-11-18 09:53 GMT
தென்காசி அருகே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி:

தென்காசி அருகே உள்ள புளிச்சிகுளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சுப்புராஜ் (வயது 26). ஆட்டோ டிரைவரான இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்புராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவர், சுப்புராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சுப்புராஜ் தென்காசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News