செய்திகள்
கோப்புபடம்

நாச்சியார்கோவில் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் - 3 பேர் கைது

Published On 2020-11-02 16:56 GMT   |   Update On 2020-11-02 16:56 GMT
நாச்சியார்கோவில் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிடைமருதூர்:

குடவாசல் அருகே செல்லூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பாரதிசெல்வன் (வயது35). இவர் சம்பவத்தன்று நாச்சியார்கோவில் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் உள்ள தனது உறவினர் செல்வம் என்பவரது வீட்டுக்கு வந்தார். அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் (30), சதீஷ்(28), பக்கிரிசாமி (56) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. இதில் 3 பேரும் சேர்ந்து பாரதி செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதிசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News