செய்திகள்
விபத்து

கோவில்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி

Published On 2020-11-02 07:04 GMT   |   Update On 2020-11-02 07:04 GMT
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலை அடுத்த முக்கூட்டுமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 60). இவர் மோட்டார் சைக்கிளில் முக்கூட்டுமலை கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வேதகோவில் தெருவை சேர்ந்த மணிமாறன் (23) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News