செய்திகள்
செல்போன் கடையில் திருடிய வடமாநில வாலிபர் கைது
தர்மபுரி அருகே செல்போன் கடையில் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் சுரேஷ். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெயித்ராம் (வயது 21) ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.