செய்திகள்
வெற்றிலை

வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு

Published On 2020-10-31 08:45 GMT   |   Update On 2020-10-31 08:45 GMT
கரூர் அருகே வெற்றிலை உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம் திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் பாலத்துறை, புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலைகளை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வெற்றிலைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வெற்றிலை உற்பத்தி குறைவால் அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்தவாரம் வெள்ளக்கொடி இளங்கால் வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.2,500-க்கு விற்றது தற்போது ரூ.3 ஆயிரத்துக்கும், கற்பூரி இளங்கால் வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ1, 500-க்கு விற்றது தற்போது ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெற்றிலைகளில் பல்வேறு வாடல் நோய்கள் ஏற்படுவதால் தமிழக அரசு நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News