search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price increased"

    நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்களில் காய்கறிகள் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது.
    செங்கோட்டை:

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பருவமழை காரணமாக விளைநிலங்கள் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.

    விளைநிலங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதால் காய்கறி பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர்கள் முழுவதுமாக நாசமடைந்துள்ளது.

    தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள காய்கறி சந்தைகளுக்கு வர வேண்டிய காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுரண்டை, பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வழக்கம் போல் வந்திறங்கும் காய்கறிகளின் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது ஐயப்ப சீசன் தொடங்கி பக்தர்கள் விரதம் இருந்து வருவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    வழக்கமாக தமிழகத்தில் மழை காரணமாக காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும். ஆனால் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை காரணமாக பயிர்கள் நாசமடைந்துள்ளதால் அங்கிருந்து காய்கறிகள் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது.

    விலை உயர்வு காரணமாக நடுத்தர குடும்பத்தினருக்கு காய்கறி வாங்குவது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் காய்கறி பொரியல் மற்றும் கூட்டு வகைகளை அதிகமாக வைத்திடும் சைவ ஓட்டல்கள் திணறி வருகின்றன.

    தற்போது நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்களில் காய்கறிகள் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாறாக மழைக்காலத்தில் அதிகளவில் கிடைத்திடும் கீரைகள் மற்றும் பயிறு வகைகள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக காய்கறி வியாபாரி கூறும்போது, வரலாறு காணாத அளவிற்கு காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. உள்ளூர் காய்கறிகளும், மலைப்பகுதிகளில் விளைந்திடும் காய்கறிகளும் மழையினால் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது.

    இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு காய்கறி வரத்தை அதிகரித்து விலை உயர்வினை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும் சிறிய ஓட்டல்களில் காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் கூட்டு, பொரியல் வகைகள் நிறுத்தப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை உருவாகிவிடும். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றார்.
    வரத்து குறைவால் அச்சு வெல்லம் விலை உயர்ந்தது. அதன்படி 30 கிலோ கொண்ட சிப்பம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    நொய்யல்:

    நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம், நல்லிக்கோவில், மூலிமங்கலம், நஞ்சை புகளூர், முத்தனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். தயாரிக்கப்பட்ட அச்சு வெல்லங்களை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக ஆக்குகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் விற்பனை ஏல மண்டிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    தொடர் மழையின் காரணமாக அச்சு வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெல்ல சிப்பங்கள் குறைந்த அளவே ஏலத்திற்கு வந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி சென்றனர்.

    அதன்படி கடந்த வாரங்களில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும், அச்சுவெல்லம் ரூ.1250-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,350-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,500-க்கும் விற்பனையானது.
    சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தவிர தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    தற்போது பெய்து வரும் பருவமழையால் தமிழகம், கர்நாடகத்தில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

    அதன்படி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

    ஒரு கிலோ கத்தரிக்காய் -ரூ.120 முதல் ரூ.130 (ரூ.60)

    பெரிய வெங்காயம் (பல்லாரி)-ரூ.40 (ரூ.35)

    கேரட், பீன்ஸ் தலா ரூ.60 (ரூ.50)

    இதுதவிர உருளைக்கிழங்கு ரூ.40, தக்காளி ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.22, சவ்சவ் ரூ.28 என விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்களுக்கு கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே தற்போதும் நீடித்தது.

    சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.

    கார்த்திகை மாதம் அய்யப்ப சாமி சீசன் தொடங்கி இருப்பதால் காய்கறிகளின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
    கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின.
    தூத்துக்குடி:

    குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வாழை இலைகள் அதிக அளவில் வரும். 2 மாவட்டங்களிலும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வந்து சேரும் இந்த வாழை இலை கட்டுகளை வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து சேரும் வாழைகட்டுகள் வரவில்லை. வழக்கமாக 500 கட்டுகள் வரை வாழைகள் குமரி மாவட்டத்தில் இருந்து வரும். ஆனால் மழையால் கடந்த 3 நாட்களாக 150 முதல் 200 கட்டுகளே வருகின்றன. வரத்து பாதியாக குறைந்ததால் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

    முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாழை இலை முக்கிய இடம் பிடிப்பதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட்டில் இன்று காலை 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

    தர்மபுரியில் இருந்து தக்காளி போன்ற காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு முன்பு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்போது கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் அவரைக்காய் ரூ.120, கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, கத்தரிக்காய் ரூ.50 என இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. கிராமப் பகுதியில் இருந்து வரும் உள்ளூர் காய்கறிகள் மழையின் காரணமாக விற்பனைக்கு வரவில்லை.

    சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிபிளவர், ஒட்டன்சத்திரம், தர்மபுரியில் இருந்து தக்காளி போன்ற காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி ஒவ்வெரு நாளும் பெட்ரோல்- டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வருகிறது.

    கடந்த மாதம் பெட்ரோல்-டீசல் விலை ஒருநாள் குறைவதும், மறுநாள் உயருவதுமாக இருந்தது. 1-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.90-க் கும், டீசல் ரூ.70.44-க்கும் விற்பனை ஆனது. 5-ந்தேதி வரை ஏற்ற, இறக்க நிலையே நீடித்தது.

    இந்நிலையில் 5-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை இறங்குமுகத்தை சந்தித்தது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்து கொண்டே வந்தது. இது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை நீடித்தது. 16-ந்தேதி வரை பெட்ரோல் விலை ரூ.2.04-ம், டீசல் விலை 80 காசும் குறைந்தது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி இருக்கிறது. 17-ந்தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.74.40-க் கும், டீசல் ரூ.70.45-க்கும் விற்பனை ஆனது. நேற்று லிட்டருக்கு 11 காசு உயர்ந்து பெட்ரோல் ரூ.74.51-க்கு விற்பனை ஆனது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. அந்தவகையில் 16-ந்தேதி முதல் பெட்ரோல் 63 காசும், டீசல் 79 காசும் உயர்ந்துள்ளது.



    அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் இரும்பு, டயர், ஆயில் போன்ற போக்குவரத்துக்கு தொடர்புடைய பொருட்கள் 4 சதவீதம் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    வத்தலக்குண்டுவில் கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த வாழைத்தார் விற்பனை ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று சூடுபிடிக்கத் தொடங்கியது.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டுவில் ஆயுதபூஜையை முன்னிட்டு வாழைத்தார் மற்றும் வாழை இலை அதிக அளவில் விற்பனைக்கு வந்தது.

    வத்தலக்குண்டு - மதுரை ரோட்டில் வாழைத்தார் கமி‌ஷன் மண்டி உள்ளது. வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் இங்கு வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வியாபாரிகள் மூலம் வாங்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த வாழைத்தார் விற்பனை ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று சூடுபிடிக்கத் தொடங்கியது.

    விலையும் கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வத்தலக்குண்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதனை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதே போல் வத்தலக்குண்டு - மதுரை ரோட்டில் தினசரி வாழை இலை மார்க்கெட் உள்ளது. இங்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக அளவில் வாழை இலை கொண்டு வரப்பட்டது. ஏலத்தில் எதிர்பார்த்த விலையை விட கூடுதல் விலை கிடைத்தது.

    ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் வீடுகளிலும், அவலலுகங்களிலும், கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக வாழை இலை மற்றும் வாழைப் பழங்களின் தேவை அதிகரிப்பால் விற்பனையும் சூடுபிடித்தது.

    திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட மாவட்டங்களின் பல்வேறு பகுதகளில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இம்மாதம் ரூ.35 அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றத்திற்கு ஏற்ப மானியத்தின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். #Cookinggascylinder
    சென்னை:

    நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றம் செய்யப்பட்டு ரூ.806-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உள்ள விலையை ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகரித்து உள்ளது. இந்த விலை ஏற்றத்தை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என நடுத்தர மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    சமையல் எரிவாயு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.747 ஆக இருந்த (மானியம் இல்லாத) சில்லறை விற்பனை விலை, கடந்த மே மாதத்தில் ரூ.96.50 குறைந்து ரூ.650.50 ஆக இருந்தது.

    மானியம் உள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர் தரும் விலை 2017-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.495.69 ஆக இருந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் ரூ.491.21 ஆக குறைந்திருக்கிறது.

    கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் விலை குறைந்த போது விலை குறைக்கப்பட்டது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால் ஜூலையில் ரூ.35-ம், இம்மாதம் (ஆகஸ்டு) ரூ.35-ம் என விலை உயர்த்தப்பட்டு உள்ளது.



    விலை ஏற்றத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போடப்படும் மானிய தொகையும் அதிகரித்து வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.  #Cookinggascylinder

    ×