என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் அவதி - மானியத் தொகை அதிகரிப்பு
Byமாலை மலர்12 Aug 2018 3:40 AM GMT (Updated: 12 Aug 2018 3:40 AM GMT)
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இம்மாதம் ரூ.35 அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றத்திற்கு ஏற்ப மானியத்தின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். #Cookinggascylinder
சென்னை:
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றம் செய்யப்பட்டு ரூ.806-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உள்ள விலையை ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகரித்து உள்ளது. இந்த விலை ஏற்றத்தை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என நடுத்தர மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சமையல் எரிவாயு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.747 ஆக இருந்த (மானியம் இல்லாத) சில்லறை விற்பனை விலை, கடந்த மே மாதத்தில் ரூ.96.50 குறைந்து ரூ.650.50 ஆக இருந்தது.
மானியம் உள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர் தரும் விலை 2017-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.495.69 ஆக இருந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் ரூ.491.21 ஆக குறைந்திருக்கிறது.
விலை ஏற்றத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போடப்படும் மானிய தொகையும் அதிகரித்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். #Cookinggascylinder
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றம் செய்யப்பட்டு ரூ.806-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உள்ள விலையை ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகரித்து உள்ளது. இந்த விலை ஏற்றத்தை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என நடுத்தர மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சமையல் எரிவாயு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.747 ஆக இருந்த (மானியம் இல்லாத) சில்லறை விற்பனை விலை, கடந்த மே மாதத்தில் ரூ.96.50 குறைந்து ரூ.650.50 ஆக இருந்தது.
மானியம் உள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர் தரும் விலை 2017-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.495.69 ஆக இருந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் ரூ.491.21 ஆக குறைந்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் விலை குறைந்த போது விலை குறைக்கப்பட்டது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால் ஜூலையில் ரூ.35-ம், இம்மாதம் (ஆகஸ்டு) ரூ.35-ம் என விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை ஏற்றத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போடப்படும் மானிய தொகையும் அதிகரித்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். #Cookinggascylinder
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X