search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் அவதி - மானியத் தொகை அதிகரிப்பு
    X

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் அவதி - மானியத் தொகை அதிகரிப்பு

    சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இம்மாதம் ரூ.35 அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றத்திற்கு ஏற்ப மானியத்தின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். #Cookinggascylinder
    சென்னை:

    நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றம் செய்யப்பட்டு ரூ.806-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உள்ள விலையை ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகரித்து உள்ளது. இந்த விலை ஏற்றத்தை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என நடுத்தர மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    சமையல் எரிவாயு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.747 ஆக இருந்த (மானியம் இல்லாத) சில்லறை விற்பனை விலை, கடந்த மே மாதத்தில் ரூ.96.50 குறைந்து ரூ.650.50 ஆக இருந்தது.

    மானியம் உள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர் தரும் விலை 2017-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.495.69 ஆக இருந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் ரூ.491.21 ஆக குறைந்திருக்கிறது.

    கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் விலை குறைந்த போது விலை குறைக்கப்பட்டது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால் ஜூலையில் ரூ.35-ம், இம்மாதம் (ஆகஸ்டு) ரூ.35-ம் என விலை உயர்த்தப்பட்டு உள்ளது.



    விலை ஏற்றத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போடப்படும் மானிய தொகையும் அதிகரித்து வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.  #Cookinggascylinder

    Next Story
    ×