செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர்

Published On 2020-10-31 06:47 GMT   |   Update On 2020-10-31 06:47 GMT
தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அயராத முயற்சி, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவால் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News