செய்திகள்
சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது
சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் மார்க்கெட் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் நடந்த விசாரணையில் அவர் சித்துராஜபுரத்தை சேர்ந்த சின்னப்பா என்கிற பாஸ்கரன் (வயது 60) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, ரூ.2 ஆயிரம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.