செய்திகள்
விபத்து பலி

திண்டுக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2020-10-19 07:55 GMT   |   Update On 2020-10-19 07:55 GMT
திண்டுக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே குடைபாறைப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார்சைக்கிளில் மதுரை-சேலம் 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News