செய்திகள்
ஏரியூர் ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஏரியூர் ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் கவனஈர்ப்பு போராட்டம் நடந்தது.
ஏரியூர்:
ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம், கோடி அள்ளி, அஜ்ஜன அள்ளி, ராமகொண்ட அள்ளி, தொன்னகுட்ட அள்ளி, மஞ்சார அள்ளி, கெண்டையன அள்ளி, பத்திர அள்ளி, நாகமரை, பெரும்பாலை உள்ளிட்ட 10 ஊராட்சி செயலாளர்களும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் மாநில சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவனஈர்ப்பு போராட்டம் நடந்தது.
இதற்காக சுஞ்சல்நதம் ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 10 ஊராட்சி செயலாளர்களும் இணைந்து, ஏரியூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பழனியிடம், நாளை (சனிக்கிழமை) தற்செயல் விடுப்பு வேண்டி விடுமுறை விண்ணப்பம் அளித்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவுவாயில் அருகே போராட்டம் தொடர்பாக பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.