செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-10-04 08:23 GMT   |   Update On 2020-10-04 08:23 GMT
வளிமண்ட சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

வளிமண்ட சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஓடிசா, அந்தமான் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News