செய்திகள்
மரணம்

தொழிலாளி மயங்கி விழுந்து பலி

Published On 2020-10-04 05:16 GMT   |   Update On 2020-10-04 05:16 GMT
பெரம்பலூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மகனூர்பட்டியை சேர்ந்தவர் சென்னப்பன் (வயது 47). ஆழ்துளை கிணறு அமைக்க பயன்படுத்தும் போர்வெல் வாகனத்தில் செல்லும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலையின் காரணமாக நேற்று முன்தினம் பெரம்பலூர் வந்த சென்னப்பன், பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்புறம் தங்கியிருந்தார். மதியம் அவர் குளிப்பதற்காக தண்ணீர் பிடிக்க குழாய் அருகே சென்றபோது, திடீரென்று மயங்கி கீழே விழுந்து, இறந்து விட்டார். இது தொடர்பாக சென்னப்பனின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News