செய்திகள்
கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க ஒப்பந்தம்: முதல்வர் தகவல்
கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க MOU கையெழுத்தாகியுள்ளன என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஏப்ரல் முதல் ஜூன்-2020 காலங்களில் "அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்" ஆக திகழ்வதாக தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க #MOU கையெழுத்தாகியுள்ளன’’ எனப் பதிவிட்டுள்ளார்.