செய்திகள்
தற்கொலை

சிவகாசி அருகே திருமணம் ஆன 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2020-09-28 09:46 GMT   |   Update On 2020-09-28 09:46 GMT
சிவகாசி அருகே திருமணம் ஆன 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியில் வசித்து வருபவர் அச்சக தொழிலாளி ரெங்கராஜ் (வயது 26). இவரது மனைவி ராஜலட்சுமி (21). இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுப்பெண் ராஜலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News