செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை

Published On 2020-09-23 15:14 GMT   |   Update On 2020-09-23 15:14 GMT
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த திருமழிசை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மதி (வயது 42). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். தன் தேவைக்காக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் தொகையை முறையாக கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு கேட்டனர். கடன் தொல்லையால் மன வேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் தனது நிறுவனத்தில் உள்ள வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி பவானி (37) வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News